Saturday, November 23, 2013

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறான், கடவுளைச் சந்திக்க வேண்டும்! என்றான்.

அவர் ‘பளார் என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.

இவன் பயந்து ஓடிப் போனான்....

பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?

‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!

‘‘அப்படியா?

‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!

No comments:

Post a Comment